அத்தியாயம்: 11, பாடம்: 35, ஹதீஸ் எண்: 1620

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَسَدِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى الْمَقَابِرِ فَكَانَ قَائِلُهُمْ يَقُولُ فِي رِوَايَةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ وَفِي رِوَايَةِ ‏ ‏زُهَيْرٍ ‏ ‏السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلَاحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களுக்கு, அவர்கள் அடக்கத் தலங்களுக்குச் செல்லும்போது கூற வேண்டியதைக் கற்றுக் கொடுத்துவந்தார்கள். அ(வ்வாறு கற்றுக் கொண்ட)வர்களுள் ஒருவர், “அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு ல லாஹிகூன். அஸ்அலுல்லாஹ லனா வ ல(க்)குமுல் ஆஃபிய்யா’ என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கற்றுக்கொடுத்ததாகக்) கூறினார்.

(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள முஃமின்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! அல்லாஹ் நாடினால் நாம் (உங்களிடம்) வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். நான் எங்களுக்காகவும் உங்களுக்காகவும் விமோசனத்தை வேண்டுகிறேன்.)

அறிவிப்பாளர் : புரைதா பின் அல்ஹஸீப் அல்அஸ்லமீ (ரலி).

குறிப்பு: அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பு, “அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி …” என்றும் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) வழி அறிவிப்பு, “அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி” என்றும் தொடங்குகிறது.

Share this Hadith:

Leave a Comment