حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ أَنَّهُ قَالَ
قَسَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبِيَةً وَلَمْ يُعْطِ مَخْرَمَةَ شَيْئًا فَقَالَ مَخْرَمَةُ يَا بُنَيَّ انْطَلِقْ بِنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقْتُ مَعَهُ قَالَ ادْخُلْ فَادْعُهُ لِي قَالَ فَدَعَوْتُهُ لَهُ فَخَرَجَ إِلَيْهِ وَعَلَيْهِ قَبَاءٌ مِنْهَا فَقَالَ خَبَأْتُ هَذَا لَكَ قَالَ فَنَظَرَ إِلَيْهِ فَقَالَ رَضِيَ مَخْرَمَةُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (‘கபா’ எனும்) மேலங்கிகளை(த் தம் தோழர்கள் சிலருக்கு)ப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். (ஆனால், என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே, என் தந்தை (என்னிடம்), “அன்பு மகனே! (என்னோடு வா!) நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வோம்” என்று சொல்ல, அவர்களுடன் நான் சென்றேன். (அங்குச் சென்று சேர்ந்ததும்) “நீ உள்ளே போய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை என்னிடம் அழைத்து வா” என்று சொன்னார்கள். நான் அவ்வாறே என் தந்தையிடம் வரும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் தந்தையிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் (‘கபா’ எனும்) அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்” என்று சொன்னார்கள். என் தந்தை அந்த அங்கியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “மக்ரமா திருப்தி அடைந்து விட்டான்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)