அத்தியாயம்: 12, பாடம்: 52, ஹதீஸ் எண்: 1789

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ ‏

‏بَعَثَ إِلَيَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِشَاةٍ مِنْ الصَّدَقَةِ فَبَعَثْتُ إِلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏مِنْهَا بِشَيْءٍ فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَ ‏ ‏هَلْ عِنْدَكُمْ شَيْءٌ قَالَتْ لَا إِلَّا أَنَّ ‏ ‏نُسَيْبَةَ ‏ ‏بَعَثَتْ إِلَيْنَا مِنْ الشَّاةِ الَّتِي بَعَثْتُمْ بِهَا إِلَيْهَا قَالَ إِنَّهَا قَدْ بَلَغَتْ مَحِلَّهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தர்மமாகக் கிடைத்த ஆடுளில் ஒன்றை எனக்கு அனுப்பிவைத்தார்கள். அதில் சிறிது இறைச்சியை நான் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றபோது, “உங்களிடம் (உண்பதற்கு) ஏதும் உள்ளதா?” எனக் கேட்டார்கள். ஆயிஷா (ரலி), “இல்லை. நீங்கள் நுஸைபா (உம்மு அத்திய்யா) வுக்கு (தர்மமாக) அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பிவைத்தார். அதைத் தவிர வேறொன்றுமில்லை” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது தனது இடத்தை (அன்பளிப்புத் தகுதியை) அடைந்துவிட்டது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : நுஸைபா (எ) உம்மு அத்தியா (ரலி)

Share this Hadith:

Leave a Comment