அத்தியாயம்: 13, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1849

حَدَّثَنَا ‏ ‏عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُمَيْدٌ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏وَاصَلَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي أَوَّلِ شَهْرِ رَمَضَانَ ‏ ‏فَوَاصَلَ ‏ ‏نَاسٌ مِنْ الْمُسْلِمِينَ فَبَلَغَهُ ذَلِكَ فَقَالَ لَوْ ‏ ‏مُدَّ ‏ ‏لَنَا الشَّهْرُ لَوَاصَلْنَا وِصَالًا يَدَعُ ‏ ‏الْمُتَعَمِّقُونَ ‏ ‏تَعَمُّقَهُمْ إِنَّكُمْ لَسْتُمْ مِثْلِي أَوْ قَالَ ‏ ‏إِنِّي لَسْتُ مِثْلَكُمْ إِنِّي أَظَلُّ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ரமளான் மாதத்தின் ஆரம்பத்தில் தொடர் நோன்பு நோற்றார்கள். (இதைக் கண்டு) முஸ்லிம்கள் சிலரும் தொடர்நோன்பு நோற்றார்கள். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “எனக்கு இந்த மாதம் (எத்தனை நாட்கள்) நீட்டிக்கப்பட்டிருந்தாலும் என்னால் தொடர்நோன்பு நோற்றிருக்க முடியும். அப்போது (வழிபாடுகளில்) அதீத ஆர்வம் காட்டுபவர்கள் தங்களது போக்கைக் வைவிட்டிருப்பர். நீங்கள் (இவ்விஷயத்தில்) என்னைப் போன்றவர்கள் அல்லர் அல்லது நான் உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்கும் நிலையில் நான் பகல் நேரத்தைக் கழிக்கின்றேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் ரலி)

Share this Hadith:

Leave a Comment