அத்தியாயம்: 13, பாடம்: 02, ஹதீஸ் எண்: 1805

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عُقْبَةَ وَهُوَ ابْنُ حُرَيْثٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُا ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ ‏
‏وَطَبَّقَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏يَدَيْهِ ثَلَاثَ مِرَارٍ وَكَسَرَ الْإِبْهَامَ فِي الثَّالِثَةِ ‏ ‏قَالَ ‏ ‏عُقْبَةُ ‏ ‏وَأَحْسِبُهُ قَالَ ‏ ‏الشَّهْرُ ثَلَاثُونَ وَطَبَّقَ كَفَّيْهِ ثَلَاثَ مِرَارٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்“ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

குறிப்பு : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) இதைக் கூறும்போது, இரு கைகைளையும் முன்று முறை கோத்துக் காட்டி, முன்றாவது தடவையில் பெருவிரலை மடித்துக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் உக்பா பின் ஹுரைஸ் (ரஹ்), “ஒரு மாதம் என்பது முப்பது நாட்களாகும் என இப்னு உமர் (ரலி) கூறி, தம்மிரு கைகளையும் மூன்று முறை கோத்துக் காட்டியதாகவே நான் கருதுகிறேன்” என்று கூறினார்கள்.

Share this Hadith:

Leave a Comment