அத்தியாயம்: 13, பாடம்: 02, ஹதீஸ் எண்: 1807

حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ عُبَيْدَةَ ‏ ‏قَالَ ‏

‏سَمِعَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏رَجُلًا يَقُولُ اللَّيْلَةَ لَيْلَةُ النِّصْفِ فَقَالَ لَهُ مَا يُدْرِيكَ أَنَّ اللَّيْلَةَ النِّصْفُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَأَشَارَ بِأَصَابِعِهِ الْعَشْرِ مَرَّتَيْنِ وَهَكَذَا فِي الثَّالِثَةِ وَأَشَارَ بِأَصَابِعِهِ كُلِّهَا وَحَبَسَ ‏ ‏أَوْ خَنَسَ ‏ ‏إِبْهَامَهُ

“இன்றைய இரவு (இம்மாதத்தின்) பாதியாகும்” என்று ஒருவர் கூறியதை இப்னு உமர் (ரலி) செவியுற்றார்கள். உடனே அந்த மனிதரிடம் “இன்றைய இரவு (இம்மாதத்தின்) பாதியாகும் என உமக்கு எப்படித் தெரியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது கை விரல்களால் இரண்டு முறை பத்து பத்து எனச் சைகை செய்து) “மாதம் என்பது இத்தனை, இத்தனை இரவுகளாகும்” என்று கூறிவிட்டு, (மூன்றாவது தடவையில்) ‘இத்தனை’ (என்று கூறியவாறு எல்லா விரல்களாலும் சைகை செய்து பெரு விரலை மட்டும் மடக்கிக் காட்டி, மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகவும் இருக்கும்) என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸஅத் பின் உபைதா (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment