و حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ أَبَاهُ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِلَيْلَةِ الْقَدْرِ إِنَّ نَاسًا مِنْكُمْ قَدْ أُرُوا أَنَّهَا فِي السَّبْعِ الْأُوَلِ وَأُرِيَ نَاسٌ مِنْكُمْ أَنَّهَا فِي السَّبْعِ الْغَوَابِرِ فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْغَوَابِرِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லைலத்துல் கத்ரு இரவு தொடர்பாகக் கூறுகையில், “உங்களில் சிலர், ரமளானின் முந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) லைலத்துல் கத்ரு இரவு இருப்பதாகக் (கனவில்) காட்டப் பெற்றனர்; உங்களில் வேறுசிலர் ரமளானின் பிந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) லைலத்துல் கத்ரு இரவு இருப்பதாகக் (கனவில்) காட்டப்பெற்றனர். நீங்கள் ரமளானின் பிந்தைய பத்தில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)