حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ وَابْنُ أَبِي عُمَرَ جَمِيعًا عَنْ ابْنِ عُيَيْنَةَ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِي يَعْفُورٍ عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ وَأَيْقَظَ أَهْلَهُ وَجَدَّ وَشَدَّ الْمِئْزَرَ
ரமளானின் இறுதிப் பத்து (நாட்கள்) துவங்கிவிட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவுகளுக்கு (வழிபாடுகளின் மூலம்) உயிரூட்டுவார்கள்; தம் துணைவியரையும் விழிக்கச் செய்வார்கள்; தமது கீழாடையை வரிந்து கட்டிக்கொண்டு வழிபாடுகளில் அதிகக் கவனம் செலுத்துவார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்பு : ‘கீழாடையை வரிந்து கட்டிக்கொள்வது என்றால் உடலுறவைத் தடுத்துக்கொள்வது’ என்று அறிஞர்கள் சிலர் கூறுவதாக ஸஹீஹ் முஸ்லிம் விரிவுரையான ‘அல் மின்ஹாஜ்’இல் இமாம் நவவீ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.