அத்தியாயம்: 15, பாடம்: 15.14, ஹதீஸ் எண்: 2098

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ نَافعٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ نَافِعٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا بِشْرٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يُحَدِّثُ ‏

‏أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ مُحْرِمٌ فَوَقَعَ مِنْ نَاقَتِهِ ‏ ‏فَأَقْعَصَتْهُ ‏ ‏فَأَمَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يُغْسَلَ بِمَاءٍ ‏ ‏وَسِدْرٍ ‏ ‏وَأَنْ يُكَفَّنَ فِي ثَوْبَيْنِ وَلَا يُمَسَّ طِيبًا خَارِجٌ رَأْسُهُ ‏

‏قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏ثُمَّ حَدَّثَنِي بِهِ بَعْدَ ذَلِكَ خَارِجٌ رَأْسُهُ وَوَجْهُهُ فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏مُلَبِّدًا

ஒருவர் இஹ்ராம் பூண்டவராக நபி (ஸல்) அவர்களிடம் வந்திருந்தார். அவர் தமது ஒட்டகத்திலிருந்து விழுந்துவிட்டார். அவரது ஒட்டகம் (அந்த இடத்திலேயே) அவரைக் கொன்றுவிட்டது. அப்போது நபி (ஸல்), “நீராலும் இலந்தை இலையாலும் அவருக்குக் குளிப்பாட்டி, இரு ஆடையால் கஃபன் அணிவிக்கப்பட வேண்டும்“ என்றும் எந்த நறுமணமும் பூசக் கூடாது; அவரது தலை வெளியில் தெரிய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு : பின்னர் இந்த ஹதீஸை அபூபிஷ்ரு (ரஹ்) எனக்கு அறிவித்தபோது, “அவரது தலையும் முகமும் வெளியில் தெரிய வேண்டும். ஏனெனில், அவர் மறுமை நாளில் தமது தலையைக் களிம்பு தடவிப் படியவைத்த நிலையில் எழுப்பப்படுவார்” என்று அறிவித்தார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment