حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
تَمَتَّعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ وَأَهْدَى فَسَاقَ مَعَهُ الْهَدْيَ مِنْ ذِي الْحُلَيْفَةِ وَبَدَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَهَلَّ بِالْعُمْرَةِ ثُمَّ أَهَلَّ بِالْحَجِّ وَتَمَتَّعَ النَّاسُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَكَانَ مِنْ النَّاسِ مَنْ أَهْدَى فَسَاقَ الْهَدْيَ وَمِنْهُمْ مَنْ لَمْ يُهْدِ فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ قَالَ لِلنَّاسِ مَنْ كَانَ مِنْكُمْ أَهْدَى فَإِنَّهُ لَا يَحِلُّ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى يَقْضِيَ حَجَّهُ وَمَنْ لَمْ يَكُنْ مِنْكُمْ أَهْدَى فَلْيَطُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ وَلْيُقَصِّرْ وَلْيَحْلِلْ ثُمَّ لِيُهِلَّ بِالْحَجِّ وَلْيُهْدِ فَمَنْ لَمْ يَجِدْ هَدْيًا فَلْيَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةً إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ وَطَافَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَدِمَ مَكَّةَ فَاسْتَلَمَ الرُّكْنَ أَوَّلَ شَيْءٍ ثُمَّ خَبَّ ثَلَاثَةَ أَطْوَافٍ مِنْ السَّبْعِ وَمَشَى أَرْبَعَةَ أَطْوَافٍ ثُمَّ رَكَعَ حِينَ قَضَى طَوَافَهُ بِالْبَيْتِ عِنْدَ الْمَقَامِ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَانْصَرَفَ فَأَتَى الصَّفَا فَطَافَ بِالصَّفَا وَالْمَرْوَةِ سَبْعَةَ أَطْوَافٍ ثُمَّ لَمْ يَحْلِلْ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى قَضَى حَجَّهُ وَنَحَرَ هَدْيَهُ يَوْمَ النَّحْرِ وَأَفَاضَ فَطَافَ بِالْبَيْتِ ثُمَّ حَلَّ مِنْ كُلِّ شَيْءٍ حَرُمَ مِنْهُ وَفَعَلَ مِثْلَ مَا فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَهْدَى وَسَاقَ الْهَدْيَ مِنْ النَّاسِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), விடைபெறும் ஹஜ்ஜின்போது உம்ராவையும் ஹஜ்ஜையும் (அடுத்தடுத்து) நிறைவேற்றினார்கள். அவர்கள் பலிப் பிராணியை (ஹஜ்ஜில்) அறுத்துப் பலியிட்டார்கள். (மதீனாவாசிகளின் இஹ்ராம் எல்லையான) துல்ஹுலைஃபாவிலிருந்தே தம்முடன் பலிப் பிராணியை நபியவர்கள் கொண்டு வந்திருந்தார்கள்.
முதலில் உம்ராவிற்கான இஹ்ராமுடன் தல்பியா கூறி, பின்னர் ஹஜ்ஜுக்காக இஹ்ராமுடன் தல்பியா கூறினார்கள். மக்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்குமாக இஹ்ராம் பூண்டிருந்தனர். மக்களில் பலிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வந்திருந்த சிலர் பலிப் பிராணியை அறுத்துப் பலியிடுபவர்களாக இருந்தனர். தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவராதவர்கள் பலியிடுபவர்களாக இருக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவிற்கு வந்ததும் மக்களிடம், “உங்களில் பலிப் பிராணியைக் கொண்டு வந்தவர்கள், தமது ஹஜ்ஜை நிறைவு செய்யாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது. பலிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் இறையில்லம் கஅபாவையும், ஸஃபா-மர்வாவுக்கு இடையேயும் சுற்றி வந்து(உம்ராவை முடித்து)விட்டு, தமது தலைமுடியை குறைத்துக் கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளட்டும்.
பின்னர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டு, அறுத்துப் பலியிடட்டும். பலிப் பிராணி கிடைக்காதவர்கள், ஹஜ்ஜின் நாட்களில் மூன்று நோன்புகளும் (ஹஜ்ஜை முடித்து) தமது வீடு திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்றுக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவிற்கு வந்ததும் (கஅபாவை ஏழு முறை) சுற்றி வந்துவிட்டு, முதல் வேலையாக (கஅபாவின்) மூலையை (ஒட்டிப் பதிக்கப்பட்டுள்ள ஹஜருல் அஸ்வதை)த் தொட்டு முத்தமிட்டார்கள். ஏழில் மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கி) வேகமாக நடந்தும், நான்கு சுற்றுகள் மெதுவாக நடந்தும் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார்கள். இறையில்லத்தைச் சுற்றி முடித்ததும் மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் ஸலாம் கொடுத்துவிட்டு நேராக ஸஃபாவுக்குச் சென்று, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஏழு தடவைச் சுற்றி (ஸயீ) வந்தார்கள்.
பிறகு ஹஜ்ஜை முடிக்கும்வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருந்தார்கள். துல்ஹஜ் பத்தாவது நாள் (யவ்முந் நஹ்ரு) அன்று தமது பலிப் பிராணியை அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் இஃபாளா) வந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள்.
மக்களில் பலிப் பிராணியைக் கொண்டுவந்து, அறுத்துப் பலியிட்டவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்ததைப் போன்றே செய்தனர்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)