அத்தியாயம்: 15, பாடம்: 32, ஹதீஸ் எண்: 2187

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏قَالَ كَانَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏يَقُولُا ‏ ‏لَا يَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏حَاجٌّ وَلَا غَيْرُ حَاجٍّ إِلَّا حَلَّ قُلْتُ ‏ ‏لِعَطَاءٍ ‏ ‏مِنْ أَيْنَ يَقُولُ ذَلِكَ قَالَ مِنْ قَوْلِ اللَّهِ تَعَالَى ” ثُمَّ مَحِلُّهَا إِلَى ‏ ‏الْبَيْتِ الْعَتِيقِ “‏‏

‏‏قَالَ قُلْتُ فَإِنَّ ذَلِكَ بَعْدَ ‏ ‏الْمُعَرَّفِ ‏ ‏فَقَالَ كَانَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ هُوَ بَعْدَ ‏ ‏الْمُعَرَّفِ ‏ ‏وَقَبْلَهُ ‏
‏وَكَانَ يَأْخُذُ ذَلِكَ مِنْ أَمْرِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ ‏ ‏أَمَرَهُمْ أَنْ يَحِلُّوا فِي حَجَّةِ الْوَدَاعِ

அதாஉ (ரஹ்), “ஹஜ் செய்பவரோ மற்ற(உம்ராச் செய்ப)வரோ இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறுபவர்களாக இருந்தார்கள்” என்று அறிவித்தார்கள்.

நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) அப்படிக் கூறுகின்றார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பின்னர் அவை (பலிப் பிராணிகள் அறுப்பதற்காகச்) சென்றடையும் இடம், பழமையான அந்த ஆலயமாகும்” எனும் (22:33ஆவது) இறை வசனத்திலிருந்தும், நபி (ஸல்) விடைபெறும் ஹஜ்ஜின்போது அவர்(களுடன் வந்தவர்)களுக்கு இஹ்ராமிலிருந்து விடுபடும்படி இட்ட கட்டளையை ஆதாரமாகக் கொண்டும்தான் அப்படிக் கூறினார்கள்” என்றார்கள்.

நான், “இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்), “அது, அரஃபாவில் தங்கியதற்குப் பின்பும் அதற்கு முன்பும் (அனுமதிக்கப்பட்டதே)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறிவந்தார்கள் என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக இபுனு ஜுரைஜ் (ரஹ்)


குறிப்பு :

தமத்துஉ ஹஜ் செய்பவர்கள், தவாஃபை நிறைவேற்றிய பின்னர், அரஃபாவுக்குச் சென்று தங்குவதற்கு முன்பு (முதல்) இஹ்ராமிலிருந்து நீங்கிவிடுவர். அதன் பின்னர் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் பூண்டு, அரஃபாவுக்குச் சென்று தங்கிய பின்பு எஞ்சியிருக்கும் சில கடமைச் செயல்பாடுகளை நிறைவு செய்து (இரண்டாவது) இஹ்ராமிலிருந்து நீங்குவர்.

கிரான் ஹஜ்ஜுச் செய்பவர்கள், அரஃபாவுக்குச் சென்று தங்கியதற்குப் பின்னர் எஞ்சியிருக்கும் சில கடமைச் செயல்பாடுகளை நிறைவு செய்து இஹ்ராமிலிருந்து நீங்குவர்.

அத்தியாயம்: 15, பாடம்: 32, ஹதீஸ் எண்: 2186

‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامُ بْنُ يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَسَّانَ ‏ ‏قَالَ ‏
‏قِيلَ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏إِنَّ هَذَا الْأَمْرَ قَدْ ‏ ‏تَفَشَّغَ ‏ ‏بِالنَّاسِ مَنْ طَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَقَدْ حَلَّ الطَّوَافُ عُمْرَةٌ فَقَالَ ‏ ‏سُنَّةُ نَبِيِّكُمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَإِنْ ‏ ‏رَغَمْتُمْ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்; இறையில்லத்தைச் சுற்றி வருதலே உம்ராவாகும் எனும் கருத்து மக்களிடையே பரவலாகிவிட்டிருக்கிறது” என்று சொல்லப்பட்டது.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை அதுவேயாகும்; – உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக அபூஹஸ்ஸான் அல்அஃரஜ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 32, ஹதீஸ் எண்: 2185

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا حَسَّانَ الْأَعْرَجَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي الْهُجَيْمِ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏مَا هَذَا الْفُتْيَا الَّتِي قَدْ ‏ ‏تَشَغَّفَتْ ‏ ‏أَوْ ‏ ‏تَشَغَّبَتْ ‏ ‏بِالنَّاسِ أَنَّ مَنْ طَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏فَقَدْ حَلَّ فَقَالَ ‏ ‏سُنَّةُ نَبِيِّكُمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَإِنْ ‏ ‏رَغِمْتُمْ

பனுல் ஹுஜைம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “ஒருவர் (மக்காவிற்கு வந்து) இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார் எனும் தீர்ப்பு (சரியா) என்ன? இது மக்களைக் ஈர்த்துள்ளது அல்லது குழப்பியுள்ளது” என்று கேட்டார்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழி முறை அதுதான் – உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக அபூஹஸ்ஸான் அல்அஃரஜ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 32, ஹதீஸ் எண்: 2184

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي عَدِيٍّ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَسَّانَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الظُّهْرَ ‏ ‏بِذِي الْحُلَيْفَةِ ‏ ‏ثُمَّ دَعَا بِنَاقَتِهِ ‏ ‏فَأَشْعَرَهَا ‏ ‏فِي ‏ ‏صَفْحَةِ ‏ ‏سَنَامِهَا الْأَيْمَنِ ‏ ‏وَسَلَتَ ‏ ‏الدَّمَ ‏ ‏وَقَلَّدَهَا نَعْلَيْنِ ‏ ‏ثُمَّ رَكِبَ ‏ ‏رَاحِلَتَهُ ‏ ‏فَلَمَّا اسْتَوَتْ بِهِ عَلَى ‏ ‏الْبَيْدَاءِ ‏ ‏أَهَلَّ ‏ ‏بِالْحَجِّ ‏
‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ إِنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا أَتَى ‏ ‏ذَا الْحُلَيْفَةِ ‏ ‏وَلَمْ يَقُلْ صَلَّى بِهَا الظُّهْرَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஹஜ்ஜுக்குச் சென்றபோது) ‘துல்ஹுலைஃபா’வில் லுஹ்ருத் தொழுகை தொழுதுவிட்டுத் தமது பலி ஒட்டகத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதன் வலப் பக்கத் திமில் பகுதியில் கீறி அடையாளமிட்டார்கள்; இரத்தத்தை துடைத்தார்கள்; இரு காலணிகளை (அதன் கழுத்தில் அடையாளத்திற்காக) தொங்கவிட்டார்கள். பின்னர் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, ‘பைதாஉ’ எனும் குன்றில் அது நேராக நின்றதும் ஹஜ்ஜுக்காகத் தல்பியாச் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :
ஹிஷாம் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘துல்ஹுலைஃபா’விற்கு வந்தபோது …” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. “அங்கு லுஹ்ருத் தொழுதார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.