حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ قَالَ سَمِعْتُ أَبَا حَسَّانَ الْأَعْرَجَ قَالَ
قَالَ رَجُلٌ مِنْ بَنِي الْهُجَيْمِ لِابْنِ عَبَّاسٍ مَا هَذَا الْفُتْيَا الَّتِي قَدْ تَشَغَّفَتْ أَوْ تَشَغَّبَتْ بِالنَّاسِ أَنَّ مَنْ طَافَ بِالْبَيْتِ فَقَدْ حَلَّ فَقَالَ سُنَّةُ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنْ رَغِمْتُمْ
பனுல் ஹுஜைம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “ஒருவர் (மக்காவிற்கு வந்து) இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார் எனும் தீர்ப்பு (சரியா) என்ன? இது மக்களைக் ஈர்த்துள்ளது அல்லது குழப்பியுள்ளது” என்று கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழி முறை அதுதான் – உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக அபூஹஸ்ஸான் அல்அஃரஜ் (ரஹ்)