و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءٍ مِنْ أَعْلَى مَكَّةَ قَالَ هِشَامٌ فَكَانَ أَبِي يَدْخُلُ مِنْهُمَا كِلَيْهِمَا وَكَانَ أَبِي أَكْثَرَ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் உயரப் பகுதியிலுள்ள ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக நுழைந்தார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி
குறிப்பு :
“என் தந்தை உர்வா (ரஹ்) (‘கதாஉ’ எனும் உயரப் பகுதி, மற்றும் ‘குதாஉ‘ எனும் தாழ்வுப் பகுதி ஆகிய) அவ்விரண்டு வழிகளிலும் நுழைவார்கள்; பெரும்பாலும் ‘கதாஉ’ வழியாகவே நுழைவார்கள்” என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் (ரஹ்) கூறுகின்றார்.