அத்தியாயம்: 15, பாடம்: 46, ஹதீஸ் எண்: 2255

‏و حَدَّثَنِي ‏ ‏سُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ ‏ ‏قَالَ: ‏

قُلْتُ ‏ ‏لِأَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏غَدَاةَ ‏ ‏عَرَفَةَ ‏ ‏مَا تَقُولُ فِي التَّلْبِيَةِ هَذَا الْيَوْمَ قَالَ سِرْتُ هَذَا الْمَسِيرَ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابِهِ ‏ ‏فَمِنَّا الْمُكَبِّرُ وَمِنَّا الْمُهَلِّلُ وَلَا يَعِيبُ أَحَدُنَا عَلَى صَاحِبِهِ

நான் அரஃபா நாளின் காலையில் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “இன்றைய தினத்தில் தல்பியா கூறுவதைப் பற்றித் தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்களுடனும் நபித்தோழர்களுடனும் (பயணம்) சென்றிருக்கிறேன். அப்போது எங்களில் சிலர் தக்பீர் கூறிக்கொண்டிருப்பர்; வேறுசிலர் தல்பியா கூறிக்கொண்டிருப்பர். எங்களில் யாரும் எவரையும் குறை கூறமாட்டார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக முஹம்மது பின் அபீபக்ரு அஸ்ஸகஃபீ (ரஹ்)

Share this Hadith: