அத்தியாயம்: 15, பாடம்: 57, ஹதீஸ் எண்: 2303

‏و حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ شِهَابٍ ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏عِيسَى بْنُ طَلْحَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ: ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَا هُوَ يَخْطُبُ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏ ‏فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ مَا كُنْتُ أَحْسِبُ يَا رَسُولَ اللَّهِ أَنَّ كَذَا وَكَذَا قَبْلَ كَذَا وَكَذَا ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كُنْتُ أَحْسِبُ أَنَّ كَذَا قَبْلَ كَذَا وَكَذَا لِهَؤُلَاءِ الثَّلَاثِ قَالَ ‏ ‏افْعَلْ وَلَا ‏ ‏حَرَجَ ‏

و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ يَحْيَى الْأُمَوِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَمَّا رِوَايَةُ ‏ ‏ابْنِ بَكْرٍ ‏ ‏فَكَرِوَايَةِ ‏ ‏عِيسَى ‏ ‏إِلَّا قَوْلَهُ لِهَؤُلَاءِ الثَّلَاثِ فَإِنَّهُ لَمْ يَذْكُرْ ذَلِكَ وَأَمَّا ‏ ‏يَحْيَى الْأُمَوِيُّ ‏ ‏فَفِي رِوَايَتِهِ حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ نَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ وَأَشْبَاهُ ذَلِكَ

நபி (ஸல்), ‘நஹ்ரு’டைய (துல் ஹஜ் பத்தாவது) நாளில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் ஒருவர் (வந்து) நின்று, “நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்னின்ன கிரியைகளைச் செய்ய வேண்டும் என அறிந்திருக்கவில்லை” என்றார். பிறகு மற்றொருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்ன கிரியையைச் செய்ய வேண்டும் என (தவறாக) நினைத்துக் கொண்டுவிட்டேன்” எனக் கூறி, (கல்லெறிதல், பலிப் பிராணியை அறுத்தல், தலைமுடி களைதல் ஆகிய) இம்மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார். அவற்றுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்” என்றே விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் பக்ரு (ரஹ்) வழி அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் இடம்பெற்றுள்ள “மூன்று விஷயங்கள்’’ என்பதைத் தவிர மற்ற விவரங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.

யஹ்யா அல்உமவீ (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் பலியிடுவதற்கு முன் தலைமுடியை மழித்துவிட்டேன். கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்” என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

Share this Hadith: