அத்தியாயம்: 15, பாடம்: 59, ஹதீஸ் எண்: 2309

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبَا بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏كَانُوا يَنْزِلُونَ الْأَبْطَحَ

‘அல்அப்தஹ்’ எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் (நஃப்ருடைய நாளில்) தங்கக்கூடியவர்களாக இருந்தனர்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

‘நஃப்ருடைய நாள்’ என்பது ஹாஜ்ஜுச் சடங்குகள் அனைத்தையும் முடித்துவிட்டு ஹாஜிகள் மினாவிலிருந்து புறப்பட்டு, கஅபாவுக்குத் திரும்பும் நாளாகும். பிறை 12இல் சிலரும் பிறை 13இல் பிறரும் மினாவிலிருந்து புறப்படுவர் (அல்குர்ஆன் 2:203).

Share this Hadith: