அத்தியாயம்: 15, பாடம்: 62, ஹதீஸ் எண்: 2325

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏

‏اشْتَرَكْنَا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْحَجِّ وَالْعُمْرَةِ كُلُّ سَبْعَةٍ فِي ‏ ‏بَدَنَةٍ ‏ ‏فَقَالَ رَجُلٌ ‏ ‏لِجَابِرٍ ‏ ‏أَيُشْتَرَكُ فِي ‏ ‏الْبَدَنَةِ ‏ ‏مَا يُشْتَرَكُ فِي ‏ ‏الْجَزُورِ ‏ ‏قَالَ مَا هِيَ إِلَّا مِنْ ‏ ‏الْبُدْنِ ‏ ‏وَحَضَرَ ‏ ‏جَابِرٌ ‏ ‏الْحُدَيْبِيَةَ ‏ ‏قَالَ نَحَرْنَا يَوْمَئِذٍ سَبْعِينَ ‏ ‏بَدَنَةً ‏ ‏اشْتَرَكْنَا كُلُّ سَبْعَةٍ فِي ‏ ‏بَدَنَةٍ

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டுச் சேர்ந்தோம்” என்று கூறினார்கள். அப்போது ஒருவர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், “அல்ஜஸூரில் கூட்டுச் சேர்cதுகொள்வதைப் போன்று அல்பதனத்தில் கூட்டுச் சேர்ந்துகொள்ளலாமா?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி), “அதுவும் பலிப் பிராணிகளில் உள்ளதே!” என்று கூறினார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கையில் பங்கேற்றார்கள். அவர்கள், “நாங்கள் அன்றைய தினத்தில் எழுபது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டோம். ஓர் ஒட்டகத்தில் தலா ஏழு பேர் கூட்டுச் சேர்ந்துகொண்டோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபுஸ்ஸுபைர் முஹம்மது பின் முஸ்லிம் (ரஹ்)


குறிப்பு :

இஹ்ராமின் போது வாங்கப்பட்ட பலிப் பிராணிக்கு ‘அல்பதனத்’ என்றும் இஹ்ராமிற்குப் பிறகு வாங்கப்பட்ட பலிப் பிராணிக்கு ‘அல்ஜஸூர்’ என்றும் இரு வேறு பெயர்கள் வழங்கப்படும்.

Share this Hadith: