அத்தியாயம்: 15, பாடம்: 64, ஹதீஸ் எண்: 2335

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ الْحَسَنِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْمُؤْمِنِينَ ‏ ‏قَالَتْ: ‏

‏أَنَا ‏ ‏فَتَلْتُ ‏ ‏تِلْكَ ‏ ‏الْقَلَائِدَ ‏ ‏مِنْ ‏ ‏عِهْنٍ ‏ ‏كَانَ عِنْدَنَا فَأَصْبَحَ فِينَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَلَالًا يَأْتِي مَا يَأْتِي الْحَلَالُ مِنْ أَهْلِهِ أَوْ يَأْتِي مَا يَأْتِي الرَّجُلُ مِنْ أَهْلِهِ

நான் அந்தப் பலிப் பிராணிகளின் அடையாள மாலைகளை, எங்களிடமிருந்த கம்பளியால் திரித்(துத் தயாரித்)தேன். (பலிப் பிராணிகளை அனுப்பிய பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராமின் நிலையேதும் இல்லாமல் எங்களிடையே (இயல்பாகவே) இருந்தார்கள். முஹ்ரிமல்லாதவர் அல்லது ஓர் ஆண், தன் துணைவியிடம் பெற்றுக்கொள்ளும்  அனுமதிக்கப்பட்ட அனைத்தையும் (எங்களிடமிருந்து) பெற்றுக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith: