அத்தியாயம்: 15, பாடம்: 68, ஹதீஸ் எண்: 2358

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ ‏ ‏الْكَعْبَةَ ‏ ‏هُوَ ‏ ‏وَأُسَامَةُ ‏ ‏وَبِلَالٌ ‏ ‏وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ الْحَجَبِيُّ ‏ ‏فَأَغْلَقَهَا عَلَيْهِ ثُمَّ مَكَثَ فِيهَا قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَسَأَلْتُ ‏ ‏بِلَالًا ‏ ‏حِينَ خَرَجَ مَا صَنَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏جَعَلَ عَمُودَيْنِ عَنْ يَسَارِهِ وَعَمُودًا عَنْ يَمِينِهِ وَثَلَاثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ وَكَانَ ‏ ‏الْبَيْتُ ‏ ‏يَوْمَئِذٍ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ ثُمَّ صَلَّى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உஸாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா அல்ஹஜபீ (ரலி) ஆகியோரும் (மக்கா வெற்றி நாளில்) இறையில்லம் கஅபாவின் உள்ளே நுழைந்தனர். உஸ்மான் தாழிட்டார். அவர்கள் (நீண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். பின்னர் பிலால் (ரலி) வெளியே வந்தபோது அவரிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (உள்ளே) என்ன செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி), “இரண்டு தூண்கள் அவர்களுக்கு இடப் பக்கமும் ஒரு தூண் அவர்களுக்கு வலப் பக்கமும் மூன்று தூண்கள் அவர்களுக்குப் பின்புறமும் இருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (நின்று) தொழுதார்கள்” என்று விடையளித்தார்கள். அன்று இறையில்லம் கஅபாவில் ஆறு தூண்கள் இருந்தன.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

Share this Hadith: