அத்தியாயம்: 15, பாடம்: 68, ஹதீஸ் எண்: 2364

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِعَطَاءٍ ‏ ‏أَسَمِعْتَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ: ‏

إِنَّمَا أُمِرْتُمْ بِالطَّوَافِ وَلَمْ تُؤْمَرُوا بِدُخُولِهِ قَالَ لَمْ يَكُنْ يَنْهَى عَنْ دُخُولِهِ وَلَكِنِّي سَمِعْتُهُ يَقُولُ أَخْبَرَنِي ‏ ‏أُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا دَخَلَ ‏ ‏الْبَيْتَ ‏ ‏دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا وَلَمْ يُصَلِّ فِيهِ حَتَّى خَرَجَ فَلَمَّا خَرَجَ رَكَعَ فِي ‏ ‏قُبُلِ ‏ ‏الْبَيْتِ ‏ ‏رَكْعَتَيْنِ وَقَالَ ‏ ‏هَذِهِ الْقِبْلَةُ قُلْتُ لَهُ مَا نَوَاحِيهَا أَفِي زَوَايَاهَا قَالَ بَلْ فِي كُلِّ قِبْلَةٍ مِنْ ‏ ‏الْبَيْتِ

நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்படித்தான் உத்தரவிடப்பட்டுள்ளீர்கள்; கஅபாவின் உள்ளே நுழையுமாறு உங்களுக்கு உத்தரவிடப்படவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதைத் தாங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்), “கஅபாவிற்குள் நுழைய வேண்டாம் என இப்னு அப்பாஸ் (ரலி) தடை விதிக்கவில்லை. ஆயினும்,

“நபி (ஸல்) இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்துப் பகுதிகளிலும் பிரார்த்தித்துவிட்டு, உள்ளே தொழாமலேயே வெளியேறிவிட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவின் (வாசல்) முன் நின்று, இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும், ‘இதுவே உங்கள் தொழும் திசை (கிப்லா) ஆகும்’ என்றும் கூறினார்கள்” என்று உஸாமா பின் ஸைத் (ரலி) கூறியதைச் செவியுற்றேன் என்பதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) கூறியதை இப்னு ஜுரைஜ் (ரஹ்) குறிப்பிடுகின்றார். மேலும்,

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அதன் பகுதிகள் என்பவை யாவை? அதன் ஒவ்வொரு மூலையையுமா குறிப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “இல்லை; இறையில்லத்தின் ஒவ்வொரு திசையிலும் (பிரார்த்தித்தார்கள்)” என்றார்கள் என்பதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) கூறுகின்றார்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)

Share this Hadith: