அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2424

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عُتْبَةَ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعِ بْنِ جُبَيْرٍ: ‏

أَنَّ ‏ ‏مَرْوَانَ بْنَ الْحَكَمِ ‏ ‏خَطَبَ النَّاسَ فَذَكَرَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَأَهْلَهَا وَحُرْمَتَهَا وَلَمْ يَذْكُرْ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَأَهْلَهَا وَحُرْمَتَهَا فَنَادَاهُ ‏ ‏رَافِعُ بْنُ خَدِيجٍ ‏ ‏فَقَالَ مَا لِي أَسْمَعُكَ ذَكَرْتَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَأَهْلَهَا وَحُرْمَتَهَا وَلَمْ تَذْكُرْ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَأَهْلَهَا وَحُرْمَتَهَا ‏ ‏وَقَدْ حَرَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا بَيْنَ ‏ ‏لَابَتَيْهَا ‏
‏وَذَلِكَ عِنْدَنَا فِي ‏ ‏أَدِيمٍ ‏ ‏خَوْلَانِيٍّ إِنْ شِئْتَ أَقْرَأْتُكَهُ قَالَ فَسَكَتَ ‏ ‏مَرْوَانُ ‏ ‏ثُمَّ قَالَ قَدْ سَمِعْتُ بَعْضَ ذَلِكَ

மர்வான் பின் அல்ஹகம் மக்களிடையே உரையாற்றியபோது மக்காவைப் பற்றியும், மக்காவாசிகள் பற்றியும் மக்காவின் புனிதம் பற்றியும் குறிப்பிட்டார். மதீனாவைப் பற்றியோ மதீனாவாசிகளைப் பற்றியோ மதீனாவின் புனிதம் பற்றியோ குறிப்பிடவில்லை. அப்போது ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) மர்வானை அழைத்து, “நீர் மக்காவைப் பற்றியும் மக்காவாசிகள் பற்றியும் மக்காவின் புனிதம் பற்றியும் கூறினீர். மதீனாவைப் பற்றியோ மதீனாவாசிகளைப் பற்றியோ மதீனாவின் சிறப்பு பற்றியோ கூறவில்லையே ஏன்? மதீனாவின் இரு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புனிதமானதாக அறிவித்து உள்ளார்கள். இந்த விஷயம் எங்களிடமுள்ள ஒரு ‘கவ்லானீ’ (குலத்தாரின் மெல்லிய) தோல் ஏட்டில் பதிவாகி உள்ளது. நீர் விரும்பினால் அதை உமக்கு நான் வாசித்துக்காட்டுவேன்” என்று கூறினார்கள். மர்வான் (சிறிது நேரம்) அமைதியாக இருந்தார். பிறகு, “அதில் சிலவற்றை நானும் செவியுற்றுள்ளேன்” என்றார்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) வழியாக நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்)

Share this Hadith: