அத்தியாயம்: 16, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2569

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادِ بْنِ جَبَلَةَ بْنِ أَبِي رَوَّادٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يَقُولُ: ‏

مَا ‏ ‏أَوْلَمَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى امْرَأَةٍ مِنْ نِسَائِهِ أَكْثَرَ ‏ ‏أَوْ أَفْضَلَ ‏ ‏مِمَّا ‏ ‏أَوْلَمَ ‏ ‏عَلَى ‏ ‏زَيْنَبَ ‏فَقَالَ ‏ ‏ثَابِتٌ الْبُنَانِيُّ ‏ ‏بِمَا ‏ ‏أَوْلَمَ ‏ ‏قَالَ أَطْعَمَهُمْ خُبْزًا وَلَحْمًا حَتَّى تَرَكُوهُ

அனஸ் பின் மாலிக் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது அளித்த மணவிருந்தைவிட அதிகமாக அல்லது சிறப்பாகத் தம் துணைவியரில் வேறெவரை மணந்தபோதும் மணவிருந்து அளிக்கவில்லை” என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது ஸாபித் அல்புனானீ (ரஹ்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணவிருந்தாக என்ன அளித்தார்கள்?” என்று (அனஸ் (ரலி) அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி), “மக்களுக்கு ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக்கொடுத்தார்கள்; மக்கள் (மிஞ்சிய) உணவை விட்டுச்சென்றனர்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக, அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்

Share this Hadith: