حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ قَالَ أَخْبَرَنَا اللَّيْثُ ح و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ:
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيَّ مَسْرُورًا تَبْرُقُ أَسَارِيرُ وَجْهِهِ فَقَالَ أَلَمْ تَرَيْ أَنَّ مُجَزِّزًا نَظَرَ آنِفًا إِلَى زَيْدِ بْنِ حَارِثَةَ وَأُسَامَةَ بْنِ زَيْدٍ فَقَالَ إِنَّ بَعْضَ هَذِهِ الْأَقْدَامِ لَمِنْ بَعْضٍ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) தம் நெற்றிக் கோடுகள் ஒளிர்ந்த வண்ணம் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்தார்கள்! அப்போது, “உனக்குத் தெரியுமா? சற்று முன் முஜஸ்ஸிஸ் என்பார், ஸைத் பின் ஹாரிஸா, (அவருடைய மகன்) உஸாமா பின் ஸைது (ஆகிய) இருவரின் பாதங்களையும் (அவ்விருவரும் படுத்திருந்தபோது) பார்த்துவிட்டு, ‘இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது‘ என்று சொன்னார்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்பு :
முஜஸ்ஸிஸ் என்பவர், அங்க அடையாளங்களைக் கொண்டு தந்தை-பிள்ளையைக் கண்டறியும் நிபுணர் ஆவார்.