حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تَزَوَّجَ أُمَّ سَلَمَةَ وَأَصْبَحَتْ عِنْدَهُ قَالَ لَهَا لَيْسَ بِكِ عَلَى أَهْلِكِ هَوَانٌ إِنْ شِئْتِ سَبَّعْتُ عِنْدَكِ وَإِنْ شِئْتِ ثَلَّثْتُ ثُمَّ دُرْتُ قَالَتْ ثَلِّثْ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்து கொண்டபோது, (மறு நாள்) காலையில் தம்முடன் இருந்த உம்மு ஸலமாவிடம், “(உன்னுடன் மூன்று நாட்கள் மட்டும் தங்குவதால்) உனக்கு உன் கணவரால் உனக்கு மதிப்புக் குறைவு என்பதில்லை. நீ விரும்பினால் உன்னிடம் ஏழு நாட்கள் தங்குவேன். நீ விரும்பினால் உன்னிடம் மூன்று நாட்கள் தங்கிவிட்டு, (மற்றத் துணைவியர்) ஒவ்வொருவரின் வீட்டுக்கும் செல்கிறேன்” என்று கூறினார்கள். அதற்கு உம்மு ஸலமா (ரலி), “என்னிடம் மூன்று நாட்கள் தங்கியிருங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி) வழியாக அப்துல் மலிக் பின் அபீபக்ரு பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)