و حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَا حَدَّثَنَا مَالِكٌ ح و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَاللَّفْظُ لَهُ قَالَ قُلْتُ لِمَالِكٍ حَدَّثَكَ نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ:
أَنَّ رَجُلًا لَاعَنَ امْرَأَتَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفَرَّقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُمَا وَأَلْحَقَ الْوَلَدَ بِأُمِّهِ قَالَ نَعَمْ
நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் ‘ஒருவர் தம் மனைவியிடம் சுய சாபம் (லிஆன்) வேண்டினார். பின்னர் அவ்விருவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரித்துவைத்தார்கள்; மேலும், குழந்தையைத் தாயிடம் சேர்த்தார்கள்’ என இப்னு உமர் (ரலி) கூறினார்கள் என்று நாஃபிஉ (ரஹ்) தங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு மாலிக் (ரஹ்) “ஆம்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக யஹ்யா பின் யஹ்யா (ரஹ்)