அத்தியாயம்: 2, பாடம்: 12, ஹதீஸ் எண்: 362

حَدَّثَنِي ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَالْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ بْنِ دِينَارٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بِلَالٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُمَارَةُ بْنُ غَزِيَّةَ الْأَنْصَارِيُّ ‏ ‏عَنْ ‏ ‏نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ ‏ ‏قَالَ رَأَيْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏
‏يَتَوَضَّأُ فَغَسَلَ وَجْهَهُ ‏ ‏فَأَسْبَغَ ‏ ‏الْوُضُوءَ ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى حَتَّى ‏ ‏أَشْرَعَ ‏ ‏فِي الْعَضُدِ ثُمَّ يَدَهُ الْيُسْرَى حَتَّى ‏ ‏أَشْرَعَ ‏ ‏فِي الْعَضُدِ ثُمَّ مَسَحَ رَأْسَهُ ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى حَتَّى ‏ ‏أَشْرَعَ ‏ ‏فِي السَّاقِ ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُسْرَى حَتَّى ‏ ‏أَشْرَعَ ‏ ‏فِي السَّاقِ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَتَوَضَّأُ وَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْتُمْ ‏ ‏الْغُرُّ ‏ ‏الْمُحَجَّلُونَ ‏ ‏يَوْمَ الْقِيَامَةِ مِنْ ‏ ‏إِسْبَاغِ ‏ ‏الْوُضُوءِ فَمَنْ اسْتَطَاعَ مِنْكُمْ فَلْيُطِلْ ‏ ‏غُرَّتَهُ ‏ ‏وَتَحْجِيلَهُ ‏

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தை முழுமையாகக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் புஜம் வரைக் கழுவினார்கள். பிறகு இடக் கரத்தை புஜம் வரை கழுவினார்கள். பிறகு (ஈரக் கையால்) தமது தலையைத் தடவினார்கள். பிறகு வலக் காலின் கணுவரை கழுவினார்கள். பிறகு இடக் காலையும் (அவ்வாறே) கணுவரைக் கழுவினார்கள். பின்னர், “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதை நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறிவிட்டு, “நீங்கள் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்தமையால் மறுமை நாளில் (உளூச் செய்த) உறுப்புகள் ஒளியுடையோராக இருப்பீர்கள். எனவே, உங்களில் யாருக்கு முடியுமோ அவர் (உளூவின் உறுப்புகளின்) எல்லைக்கு மேல் அதிகமாகக் கழுவிக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக நுஐம் பின் அப்தில்லாஹ் அல்முஜ்மிர் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment