و حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَا حَدَّثَنَا إِسْمَعِيلُ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ: |
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் சிவக்காத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; (தானியக்) கதிர்கள் (முற்றி) வெண்ணிறமாகி, அவை கருகல் நோயிலிருந்து பாதுகாப்புப் பெறும் வரை அவற்றை விற்பதற்கும் தடை விதித்தார்கள். விற்பவர் வாங்குபவர் ஆகிய இருவருக்கும் (இவ்வாறு) தடை விதித்தார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி).