அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2987

‏حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ: ‏
كُنَّا نُرْزَقُ تَمْرَ ‏ ‏الْجَمْعِ ‏ ‏عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏الْخِلْطُ ‏ ‏مِنْ التَّمْرِ فَكُنَّا نَبِيعُ ‏ ‏صَاعَيْنِ ‏ ‏بِصَاعٍ ‏ ‏فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏لَا ‏ ‏صَاعَيْ ‏ ‏تَمْرٍ بِصَاعٍ وَلَا صَاعَيْ حِنْطَةٍ بِصَاعٍ وَلَا دِرْهَمَ بِدِرْهَمَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் தரம் குறைந்த பேரீச்சம் பழங்கள் எங்களுக்கு வழங்கப்படும். அவை கலப்புப் பேரீச்சம் பழங்களாகும். அவற்றில் இரண்டு ‘ஸாஉ’களுக்கு ஒரு ‘ஸாஉ’ (தரமான பேரீச்சம் பழம்) என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்து வந்தோம். இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, “ஒரு ‘ஸாஉ’க்கு இரண்டு ‘ஸாஉ’கள் பேரீச்சம் பழங்கள் (பண்டமாற்று) கூடாது; ஒரு ஸாஉக்கு இரண்டு ‘ஸாஉ’கள் கோதுமை (பண்டமாற்று) கூடாது; இரண்டு வெள்ளி திர்ஹங்களுக்கு ஒரு வெள்ளி திர்ஹமும் கூடாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

Share this Hadith: