அத்தியாயம்: 22, பாடம்: 22, ஹதீஸ் எண்: 3003

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارِ بْنِ عُثْمَانَ الْعَبْدِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

كَانَ لِرَجُلٍ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَقٌّ فَأَغْلَظَ لَهُ فَهَمَّ بِهِ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً – فَقَالَ لَهُمُ – اشْتَرُوا لَهُ سِنًّا فَأَعْطُوهُ إِيَّاهُ ‏”‏.‏ فَقَالُوا إِنَّا لاَ نَجِدُ إِلاَّ سِنًّا هُوَ خَيْرٌ مِنْ سِنِّهِ ‏.‏ قَالَ ‏” فَاشْتَرُوهُ فَأَعْطُوهُ إِيَّاهُ فَإِنَّ مِنْ خَيْرِكُمْ – أَوْ خَيْرَكُمْ – أَحْسَنُكُمْ قَضَاءً” ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருவருக்குக் கடன் கொடுக்க வேண்டியிருந்தது. (அதைக் கேட்டுவந்தபோது) அவர் கடுஞ் சொற்களைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரை(ப் பிடித்து)க் கண்டிக்கத் தயாராயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கடன் கொடுத்தவருக்கு (இவ்வாறு) பேச உரிமை உண்டு (அவரை விடுங்கள்.)” என்று கூறிவிட்டு, “அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒட்டகமொன்றை வாங்கி வாருங்கள்” என்றார்கள். மக்கள் (சென்றுவிட்டு வந்து) அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தைவிட அதிக வயதுடைய ஒட்டகங்களைத் தவிர வேறெதையும் நாங்கள் காணவில்லை” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்களில் உள்ளவர் /  உங்களில் சிறந்தவர் ஆவார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith: