அத்தியாயம்: 22, பாடம்: 22, ஹதீஸ் எண்: 3005

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:‏ ‏

جَاءَ رَجُلٌ يَتَقَاضَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعِيرًا فَقَالَ ‏ “‏ أَعْطُوهُ سِنًّا فَوْقَ سِنِّهِ – وَقَالَ – خَيْرُكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (கடனாகக்) கொடுத்திருந்த ஒட்டகத்தைக் கேட்டு ஒருவர் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தை அவருக்குக் கொடுங்கள்” என்றும் “அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)