அத்தியாயம்: 22, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2923

حَدَّثَنَا ‏ ‏أَبُو الْهَيْثَمِ خَالِدُ بْنُ خِدَاشِ بْنِ عَجْلَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ: ‏
أَنَّ ‏ ‏أَبَا قَتَادَةَ ‏ ‏طَلَبَ ‏ ‏غَرِيمًا ‏ ‏لَهُ فَتَوَارَى عَنْهُ ثُمَّ وَجَدَهُ فَقَالَ إِنِّي مُعْسِرٌ فَقَالَ ‏ ‏آللَّهِ قَالَ ‏ ‏آللَّهِ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ سَرَّهُ أَنْ يُنْجِيَهُ اللَّهُ مِنْ ‏ ‏كُرَبِ ‏ ‏يَوْمِ الْقِيَامَةِ ‏ ‏فَلْيُنَفِّسْ ‏ ‏عَنْ مُعْسِرٍ أَوْ ‏ ‏يَضَعْ ‏ ‏عَنْهُ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏جَرِيرُ بْنُ حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

என் தந்தை அபூகத்தாதா (ரலி), தமக்குக் கடனைத் திருப்பித் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், “நான் (வசதியின்றி) சிரமப்படுபவன்” என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி), “அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா?” என்று கேட்டார்கள். அவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான்” என்றார். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று அபூகத்தாதா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா.(ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்)

Share this Hadith: