حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ:
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” أَلَكَ بَنُونَ سِوَاهُ ” قَالَ نَعَمْ . قَالَ ” فَكُلَّهُمْ أَعْطَيْتَ مِثْلَ هَذَا ” قَالَ لاَ . قَالَ ” فَلاَ أَشْهَدُ عَلَى جَوْرٍ ”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என் தந்தையிடம்), “உமக்கு இவரைத் தவிர வேறு மகன்கள் உண்டா?” என்று கேட்டார்கள். என் தந்தை “ஆம்” என்றார்கள். “அவர்கள் அனைவருக்கும் இதைப் போன்று (அன்பளிப்பு) கொடுத்தீரா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். அதற்கு என் தந்தை “இல்லை” என்றார்கள். “அப்படியானால், நான் அநீதிக்குச் சாட்சியாக இருக்கமாட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மறுத்துவிட்டார்கள்.
அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)