அத்தியாயம்: 24, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3069

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ- وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ – قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ :‏ ‏

أَعْمَرَتِ امْرَأَةٌ بِالْمَدِينَةِ حَائِطًا لَهَا ابْنًا لَهَا ثُمَّ تُوُفِّيَ وَتُوُفِّيَتْ بَعْدَهُ وَتَرَكَتْ وَلَدًا وَلَهُ إِخْوَةٌ بَنُونَ لِلْمُعْمِرَةِ فَقَالَ وَلَدُ الْمُعْمِرَةِ رَجَعَ الْحَائِطُ إِلَيْنَا وَقَالَ بَنُو الْمُعْمَرِ بَلْ كَانَ لأَبِينَا حَيَاتَهُ وَمَوْتَهُ ‏.‏ فَاخْتَصَمُوا إِلَى طَارِقٍ مَوْلَى عُثْمَانَ فَدَعَا جَابِرًا فَشَهِدَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْعُمْرَى لِصَاحِبِهَا فَقَضَى بِذَلِكَ طَارِقٌ ثُمَّ كَتَبَ إِلَى عَبْدِ الْمَلِكِ فَأَخْبَرَهُ ذَلِكَ وَأَخْبَرَهُ بِشَهَادَةِ جَابِرٍ فَقَالَ عَبْدُ الْمَلِكِ صَدَقَ جَابِرٌ ‏ فَأَمْضَى ذَلِكَ طَارِقٌ ‏.‏ فَإِنَّ ذَلِكَ الْحَائِطَ لِبَنِي الْمُعْمَرِ حَتَّى الْيَوْمِ ‏.‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ – وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّ طَارِقًا، قَضَى بِالْعُمْرَى لِلْوَارِثِ لِقَوْلِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

மதீனாவிலிருந்த ஒரு பெண்மணி தம் மகன்களுள் ஒருவருக்குத் தமது தோட்டமொன்றை ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கினார். பிறகு அந்த மகன் இறந்துவிட்டார். மகனுக்குப் பின் அவரின் தாயும் இறந்துவிட்டார். அந்த மகன்காரர் குழந்தைகளை விட்டுச்சென்றிருந்தார். அந்த மகன்காரருக்குத் தாய் வயிற்றில் பிறந்த அவரின் சகோதரர்களும் இருந்தனர். (அவரின் இறப்புக்குப் பின்,) அன்பளிப்பு வழங்கிய அப்பெண்ணின் மைந்தர்கள், “தோட்டம் திரும்ப எங்களுக்கே கிடைக்கும்” என்று கூறினர். அன்பளிப்புப் பெற்றவரின் மகன்கள், “இல்லை; அதன் உரிமை. வாழ்ந்த போதும் இறந்த பின்பும் எங்கள் தந்தைக்கே உரியது” என்று கூறினர்.

பின்னர் இவ்வழக்கை (மதீனாவின் அன்றைய ஆளுநராயிருந்த) உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான தாரிக் பின் அம்ரு (ரஹ்) அவர்களிடம் கொண்டுசென்றனர். தாரிக் பின் அம்ரு, ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி(வழக்கை எடுத்துக் கூறி)னார். அப்போது ஜாபிர் (ரலி), “ஆயுட்கால அன்பளிப்பு, அதைப் பெற்றவருக்கே உரியதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்று சாட்சியமளித்தார்கள்.

அதன்படியே தாரிக் பின் அம்ருவும் தீர்ப்பு வழங்கினார். பிறகு தாரிக், (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்குக் கடிதம் எழுதி விவரத்தையும் ஜாபிர் (ரலி) அவர்களின் சாட்சியத்தையும் தெரிவித்தார். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான், “ஜாபிர் சொன்னது உண்மையே” என்று கூறினார். பின்னர் இதையே தாரிக் நடைமுறைப்படுத்தினார். அந்தத் தோட்டம் ஆயுட்கால அன்பளிப்புப் பெற்ற(பின் இறந்த)வரின் மகன்களிடமே இன்றுவரை இருந்துவருகிறது.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவித்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டே, “ஆயுட்கால அன்பளிப்பு, (அன்பளிப்புப் பெற்றவரின் ஆயுளுக்குப் பிறகு அவருடைய) வாரிசுகளுக்கே உரியதாகும்” என்று தாரிக் பின் அம்ரு (ரஹ்) தீர்ப்பளித்தார்கள் என்று ஸுலைமான் பின் யஸார் (ரஹ்) அறிவித்தார்.

Share this Hadith: