அத்தியாயம்: 27, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3115

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْعَزِيزِ – يَعْنِي ابْنَ رُفَيْعٍ – عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، قَالَ جَاءَ سَائِلٌ إِلَى عَدِيِّ بْنِ حَاتِمٍ فَسَأَلَهُ نَفَقَةً فِي ثَمَنِ خَادِمٍ أَوْ فِي بَعْضِ ثَمَنِ خَادِمٍ ‏.‏ فَقَالَ لَيْسَ عِنْدِي مَا أُعْطِيكَ إِلاَّ دِرْعِي وَمِغْفَرِي فَأَكْتُبُ إِلَى أَهْلِي أَنْ يُعْطُوكَهَا ‏.‏ قَالَ فَلَمْ يَرْضَ فَغَضِبَ عَدِيٌّ فَقَالَ أَمَا وَاللَّهِ لاَ أُعْطِيكَ شَيْئًا ثُمَّ إِنَّ الرَّجُلَ رَضِيَ فَقَالَ:‏

أَمَا وَاللَّهِ لَوْلاَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ ثُمَّ رَأَى أَتْقَى لِلَّهِ مِنْهَا فَلْيَأْتِ التَّقْوَى”‏ ‏ مَا حَنَّثْتُ يَمِينِي ‏

ஒருவர் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடம் உதவி கேட்டு வந்தார். ஒரு பணியாளரை விலைக்கு வாங்கும் கிரயத் தொகையை, அல்லது கிரயத் தொகையில் ஒரு பகுதியைத் தரும்படிக் கேட்டார். அப்போது அதீ பின் ஹாத்திம் (ரலி), “உமக்குத் தர என்னிடம் (இப்போது) எனது கவச ஆடையையும் எனது தலைக் கவசத்தையும் தவிர வேறொன்றுமில்லை. எனவே, நான் என் குடும்பத்தாருக்குக் கடிதம் எழுதித் தருகின்றேன். அவர்கள் உமக்கு அந்தத் தொகையைத் தருவார்கள்” என்று கூறினார்கள்.

ஆனால், வந்தவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அதீ (ரலி) கோபமடைந்து, “கேட்டுக்கொள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உமக்கு ஒன்றுமே நான் தரமாட்டேன்” என்று கூறினார்கள். பிறகு அவர் (கடிதம் பெற்றுக்கொள்ளச்) சம்மதித்தார். அப்போது அதீ பின் ஹாத்திம் (ரலி), “கேட்டுக்கொள்: “ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு, அஃதல்லாத வேறொன்றை அதைவிட இறையச்சத்திற்குரிய செயலாகக் கருதினால் அந்த இறையச்சத்திற்குரிய செயலையே அவர் செய்யட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டிராவிட்டால், நான் எனது சத்தியத்தை முறித்திருக்கமாட்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அதீ பின் ஹாத்திம் (ரலி) வழியாக தமீம் பின் தரஃபா அத்தாயீ (ரஹ்)

Share this Hadith: