அத்தியாயம்: 27, பாடம்: 8, ஹதீஸ் எண்: 3136

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مَسْعُودٍ :‏

أَنَّهُ كَانَ يَضْرِبُ غُلاَمَهُ فَجَعَلَ يَقُولُ أَعُوذُ بِاللَّهِ – قَالَ – فَجَعَلَ يَضْرِبُهُ فَقَالَ أَعُوذُ بِرَسُولِ اللَّهِ ‏ فَتَرَكَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “وَاللَّهِ لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ”‏‏ قَالَ فَأَعْتَقَهُ


وَحَدَّثَنِيهِ بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدٌ – يَعْنِي ابْنَ جَعْفَرٍ – عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ قَوْلَهُ أَعُوذُ بِاللَّهِ أَعُوذُ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

நான் (ஒரு முறை) என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன். அவர், “அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்” என்றார். நான் (தொடர்ந்து) அவரை அடிக்கலானேன். அவர், (எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதரைக் கண்டு) “நான் அல்லாஹ்வின் தூதரிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்” என்றார். உடனே அவரை நான் விட்டு விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வின் மீதாணையாக! (இவரைத் தண்டிப்பதற்கு) இவர்மீது உனக்குள்ள ஆற்றலைவிட (உன்னைத் தண்டிப்பதற்கு) அல்லாஹ் உன்மீது அதிக ஆற்றல் படைத்தவன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் (ரலி


குறிப்பு :

முஹம்மது பின் ஜஅஃபர் வழி அறிவிப்பில், “நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்; அல்லாஹ்வின் தூதரிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Share this Hadith: