அத்தியாயம்: 28, பாடம்: 11, ஹதீஸ் எண்: 3187

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ – وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ – قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ:‏

اسْتَشَارَ عُمَرُ بْنُ الْخَطَّابِ النَّاسَ فِي إِمْلاَصِ الْمَرْأَةِ فَقَالَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ شَهِدْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى فِيهِ بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ ‏.‏ قَالَ فَقَالَ عُمَرُ ائْتِنِي بِمَنْ يَشْهَدُ مَعَكَ قَالَ فَشَهِدَ لَهُ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ

ஒரு (கர்ப்பிணிப்) பெண்ணை (அடித்துக்) குறைப் பிரசவம் (கருச் சிதைவு) ஏற்படவைத்தால், (அதற்குரிய இழப்பீடு) என்ன? என்பது தொடர்பாக (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி), மக்களிடம் கருத்துக் கேட்டார்கள். அப்போது முஃகீரா பின் ஷுஅபா (ரலி), “நபி (ஸல்) அடிமையான ஓர் ஆணையோ பெண்ணையோ அந்த சிசுவிற்காக (இழப்பீடாக) வழங்குமாறு தீர்ப்பளித்தபோது நான் அங்கு இருந்தேன்” என்று கூறினார்கள்.

உமர் (ரலி), “இதற்கு உம்முடன் சாட்சியம் அளிக்கும் ஒருவரை என்னிடம் அழைத்து வாரும்” என்றார்கள். அப்போது முஹம்மது பின் மஸ்லமா (ரலி) (முஃகீரா (ரலி) கூறியது உண்மையென) அதற்குச் சாட்சியம் அளித்தார்கள்.

அறிவிப்பாளர் : மிஸ்வர் பின் அல்மக்ரமா (ரலி)

Share this Hadith: