அத்தியாயம்: 28, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3171

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى ابْنِ مُنْيَةَ عَنْ أَبِيهِ قَالَ:‏

أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ وَقَدْ عَضَّ يَدَ رَجُلٍ فَانْتَزَعَ يَدَهُ فَسَقَطَتْ ثَنِيَّتَاهُ – يَعْنِي الَّذِي عَضَّهُ – قَالَ فَأَبْطَلَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ ‏ “‏أَرَدْتَ أَنْ تَقْضَمَهُ كَمَا يَقْضَمُ الْفَحْلُ‏”‏ ‏

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (ஒரு வழக்குடன்) வந்தார். அவர் மற்றொருவரின் கையைக் கடித்தபோது, (கடிபட்ட) அவர் தமது கையை இழுக்க, கடித்தவரது முன்பற்கள் இரண்டு விழுந்து விட்டன. அப்போது நபி (ஸல்) (இதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என) அவரது வழக்கைத் தள்ளுபடி செய்தார்கள். மேலும் “நீ அவரை, கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிக்க முனைந்தாய்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் முன்யா (ரலி)

Share this Hadith: