حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ – وَاللَّفْظُ لِقُتَيْبَةَ – قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ سِمَاكٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ :
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِمَاعِزِ بْنِ مَالِكٍ ” أَحَقٌّ مَا بَلَغَنِي عَنْكَ ” . قَالَ وَمَا بَلَغَكَ عَنِّي قَالَ ” بَلَغَنِي أَنَّكَ وَقَعْتَ بِجَارِيَةِ آلِ فُلاَنٍ ” . قَالَ نَعَمْ . قَالَ فَشَهِدَ أَرْبَعَ شَهَادَاتٍ . ثُمَّ أَمَرَ بِهِ فَرُجِمَ .
நபி (ஸல்), மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் “உம்மைப் பற்றி எனக்குக் கிடைத்த செய்தி உண்மையா?” என்று கேட்டார்கள். மாஇஸ் (ரலி), “என்னைப் பற்றி தங்களுக்கு என்ன செய்தி கிட்டியது?” என்று கேட்டார்கள். நபி (ஸல்), “நீர் இன்ன குடும்பத்து இளம் பெண்ணுடன் தவறான உறவு கொண்டுவிட்டதாக எனக்குச் செய்தி எட்டியது” என்றார்கள்.
அதற்கு மாஇஸ் (ரலி), “ஆம்” என்று கூறி, தமக்கெதிராக நான்கு முறை சாட்சியம் (கூறி ஒப்புதல் வாக்குமூலம்) அளித்தார்கள். பின்னர் (அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு) நபி (ஸல்) கட்டளையிட, அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)