அத்தியாயம்: 3, பாடம்: 18, ஹதீஸ் எண்: 513

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا ‏
‏وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَتْ ‏ ‏بَنُو إِسْرَائِيلَ ‏ ‏يَغْتَسِلُونَ عُرَاةً يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى سَوْأَةِ بَعْضٍ وَكَانَ ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏يَغْتَسِلُ وَحْدَهُ فَقَالُوا وَاللَّهِ مَا يَمْنَعُ ‏ ‏مُوسَى ‏ ‏أَنْ يَغْتَسِلَ مَعَنَا إِلَّا أَنَّهُ آدَرُ قَالَ فَذَهَبَ مَرَّةً يَغْتَسِلُ فَوَضَعَ ثَوْبَهُ عَلَى حَجَرٍ فَفَرَّ الْحَجَرُ بِثَوْبِهِ قَالَ ‏ ‏فَجَمَحَ ‏ ‏مُوسَى ‏ ‏بِإِثْرِهِ يَقُولُ ثَوْبِي حَجَرُ ثَوْبِي حَجَرُ حَتَّى نَظَرَتْ ‏ ‏بَنُو إِسْرَائِيلَ ‏ ‏إِلَى سَوْأَةِ ‏ ‏مُوسَى ‏ ‏قَالُوا وَاللَّهِ مَا ‏ ‏بِمُوسَى ‏ ‏مِنْ بَأْسٍ فَقَامَ الْحَجَرُ حَتَّى نُظِرَ إِلَيْهِ قَالَ فَأَخَذَ ثَوْبَهُ فَطَفِقَ بِالْحَجَرِ ضَرْبًا قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏وَاللَّهِ إِنَّهُ بِالْحَجَرِ نَدَبٌ سِتَّةٌ أَوْ سَبْعَةٌ ضَرْبُ ‏ ‏مُوسَى ‏ ‏بِالْحَجَرِ ‏

பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார், ஒருவர் மற்றவரது மறையுறுப்பைப் பார்க்கும் நிலையில் பிறந்தமேனியுடன் (கூட்டாகக்) குளிக்கும் வழக்கம் உடையோராக இருந்தனர். மூஸா (அலை) எப்போதும் தனியாகவே குளிப்பார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! விதைவீக்க நோயாளியாய் இருப்பதனால்தான் மூஸா நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை” என்று அம்மக்கள் கேலி பேசினர். ஒருமுறை மூஸா (அலை) குளிக்கப் போனபோது தமது ஆடையை(க் களைந்து) ஒரு கல்லின் மீது வைத்(து விட்டுக் குளித்)தார்கள். அந்தக் கல் அவர்களது துணியுடன் ஓடியது. மூஸா (அலை) அதைப் பின்தொடர்ந்து “கல்லே, எனது துணி; கல்லே, எனது துணி!” என்று கூறியவாறு விரைந்து ஓடி, (இறுதியாக பனூ இஸ்ராயீல் மக்கள் பகுதிக்கு) வந்தபோது மூஸா (அலை) அவர்களது மறையுறுப்பை அவர்கள் பார்த்து விட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! மூஸாவுக்கு எந்தக் குறையுமில்லை” என்று கூறினர். மூஸா (அலை) அவர்கள் (நிர்வாணமாகப்) பார்க்கப்படும்வரை (ஓடிய) அந்தக் கல் நின்றது. உடனே மூஸா (அலை) அவர்கள் தமது ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை (த் தமது கைத்தடியால்) அடிக்கலானார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

குறிப்பு:

“அல்லாஹ்வின் மீதாணையாக! மூஸா (அலை) கல்லின் மீது அடித்ததில் ஆறு அல்லது ஏழு தழும்புகள் அந்தக் கல்லில் பதிந்து விட்டன” என்று இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) (கூடுதலாகக்) கூறுகிறார்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த பல ஹதீஸ்களுள் இதுவும் ஒன்று” என்று ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) கூறுகிறார்.

Share this Hadith:

Leave a Comment