அத்தியாயம்: 3, பாடம்: 29, ஹதீஸ் எண்: 557

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏وَاصِلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَقِيَهُ وَهُوَ جُنُبٌ ‏ ‏فَحَادَ ‏ ‏عَنْهُ فَاغْتَسَلَ ثُمَّ جَاءَ فَقَالَ كُنْتُ جُنُبًا قَالَ ‏ ‏إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ ‏

நான் பெருந்துடக்காளியாக இருந்தபோது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து விலகிச் சென்று குளித்து விட்டு வந்து, “நான் பெருந்துடக்கு உள்ளவனாய் இருந்தேன். (குளித்து விட்டு வரத் தாமதமாகி விட்டது)” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கினால்) அசுத்தமாகி விடமாட்டார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)

Share this Hadith:

Leave a Comment