و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِي نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ :
أَنَّ عُمَرَ اسْتَفْتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ هَلْ يَنَامُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ قَالَ نَعَمْ لِيَتَوَضَّأْ ثُمَّ لِيَنَمْ حَتَّى يَغْتَسِلَ إِذَا شَاءَ
“எங்களில் ஒருவர் பெருந்துடக்காளி ஆகி (குளிக்காமல்) உறங்கலாமா?” என்று (என் தந்தை) உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்), “ஆம், அவர் உளூச் செய்து விட்டுப் பின்னர் உறங்கட்டும். விரும்பும்போது குளித்துக் கொள்ளட்டும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
குறிப்பு:
பெருந்துடக்காளி, தொழுகைக்கு முன்னர் குளித்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். “விரும்பும்போது குளித்துக் கொள்ளட்டும்” என்ற அனுமதி, உடலுறவு முடிந்த அல்லது உறக்கத்தில் விந்து வெளியேறிய உடனடியாகக் குளித்தாக வேண்டியது கட்டாயமில்லை என்பதை உள்ளடக்கியதாகும்.