حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ :
نَزَلَتْ فِيَّ أَرْبَعُ آيَاتٍ أَصَبْتُ سَيْفًا فَأَتَى بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ نَفِّلْنِيهِ . فَقَالَ ” ضَعْهُ ” . ثُمَّ قَامَ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ” ضَعْهُ مِنْ حَيْثُ أَخَذْتَهُ ” . ثُمَّ قَامَ فَقَالَ نَفِّلْنِيهِ يَا رَسُولَ اللَّهِ . فَقَالَ ” ضَعْهُ ” . فَقَامَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ نَفِّلْنِيهِ أَأُجْعَلُ كَمَنْ لاَ غَنَاءَ لَهُ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ” ضَعْهُ مِنْ حَيْثُ أَخَذْتَهَ ” . قَالَ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ {يَسْأَلُونَكَ عَنِ الأَنْفَالِ قُلِ الأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ}
என் விஷயத்தில் நான்கு இறைவசனங்கள் அருளப்பெற்றன. நான் (குமுஸ் நிதியிலிருந்து) வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்குக் கொடையாக வழங்குங்கள்” என்று கேட்டேன்.
நபியவர்கள், “அதை வைத்துவிடு” என்றார்கள். பிறகு நான் (அதைக் கொடையாக வழங்கக் கேட்டு) எழுந்து நின்றேன். நபியவர்கள், “எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிடு” என்று சொன்னார்கள்.
பிறகு மீண்டும் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! அதை எனக்குக் கொடையாக வழங்குங்கள்” என்று கேட்டேன். நபி (ஸல்) , “(இல்லை) அதை வைத்துவிடு” என்றார்கள். பிறகும் நான் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்குக் கொடையாக வழங்கிவிடுங்கள். போதுமென்ற மனமில்லாத ஒருவனாக நான் கருதப்படுகிறேனா?” என்று கேட்டேன்.
அப்போதும் நபி (ஸல்), “எடுத்த இடத்திலேயே அதை வை!” என்று கூறினார்கள். அப்போதுதான் “(நபியே!) போர் வெற்றிச் செல்வங்களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். ‘அந்தச் செல்வங்கள் (பற்றி முடிவு செய்யும் அதிகாரம்) அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் உரியது’ என்று கூறுவீராக!” (8:1) எனும் எனும் இந்த வசனம் அருளப்பெற்றது.
அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)