அத்தியாயம்: 32, பாடம்: 14, ஹதீஸ் எண்: 3298

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنِي أَبِي قَالَ :‏

غَزَوْنَا فَزَارَةَ وَعَلَيْنَا أَبُو بَكْرٍ أَمَّرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَيْنَا فَلَمَّا كَانَ بَيْنَنَا وَبَيْنَ الْمَاءِ سَاعَةٌ أَمَرَنَا أَبُو بَكْرٍ فَعَرَّسْنَا ثُمَّ شَنَّ الْغَارَةَ فَوَرَدَ الْمَاءَ فَقَتَلَ مَنْ قَتَلَ عَلَيْهِ وَسَبَى وَأَنْظُرُ إِلَى عُنُقٍ مِنَ النَّاسِ فِيهِمُ الذَّرَارِيُّ فَخَشِيتُ أَنْ يَسْبِقُونِي إِلَى الْجَبَلِ فَرَمَيْتُ بِسَهْمٍ بَيْنَهُمْ وَبَيْنَ الْجَبَلِ فَلَمَّا رَأَوُا السَّهْمَ وَقَفُوا فَجِئْتُ بِهِمْ أَسُوقُهُمْ وَفِيهِمُ امْرَأَةٌ مِنْ بَنِي فَزَارَةَ عَلَيْهَا قِشْعٌ مِنْ أَدَمٍ – قَالَ الْقِشْعُ النِّطَعُ – مَعَهَا ابْنَةٌ لَهَا مِنْ أَحْسَنِ الْعَرَبِ فَسُقْتُهُمْ حَتَّى أَتَيْتُ بِهِمْ أَبَا بَكْرٍ فَنَفَّلَنِي أَبُو بَكْرٍ ابْنَتَهَا فَقَدِمْنَا الْمَدِينَةَ وَمَا كَشَفْتُ لَهَا ثَوْبًا فَلَقِيَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي السُّوقِ فَقَالَ ‏”‏ يَا سَلَمَةُ هَبْ لِي الْمَرْأَةَ ‏”‏ ‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لَقَدْ أَعْجَبَتْنِي وَمَا كَشَفْتُ لَهَا ثَوْبًا ثُمَّ لَقِيَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْغَدِ فِي السُّوقِ فَقَالَ لِي ‏”‏ يَا سَلَمَةُ هَبْ لِي الْمَرْأَةَ لِلَّهِ أَبُوكَ ‏”‏ ‏.‏ فَقُلْتُ هِيَ لَكَ يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ مَا كَشَفْتُ لَهَا ثَوْبًا فَبَعَثَ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أَهْلِ مَكَّةَ فَفَدَى بِهَا نَاسًا مِنَ الْمُسْلِمِينَ كَانُوا أُسِرُوا بِمَكَّةَ ‏.‏

நாங்கள் ‘ஃபஸாரா’ குலத்தார்மீது போரிடச் சென்றபோது எங்களுக்கு அபூபக்ரு (ரலி) தளபதியாக இருந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எங்களுக்குத் தளபதியாக நியமித்திருந்தார்கள்.

எங்களுக்கும் (ஃபஸாரா குலத்தாரின்) நீர் நிலைக்குமிடையே ஒரு மணி நேரப் பயணத் தொலைவு இருந்தபோது, இரவின் இறுதி நேரத்தில் அபூபக்ரு (ரலி) எங்களை ஓய்வெடுக்கச் சொன்னார்கள்.

பின்னர் (காலைத் தொழுகைக்குப் பின்) பல்வேறு திசைகளிலிருந்து அதிரடித் தாக்குதல் தொடுத்தோம். அப்போது நீர்நிலைக்கு வந்த அபூபக்ரு (ரலி), அங்குச் சிலரை வெட்டி வீழ்த்தினார்கள்; வேறுசிலரைச் சிறைப்பிடித்தார்கள்.

அப்போது நான் (எதிரிகளில்) ஒரு கூட்டத்தைப் பார்த்தேன். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் என்னை முந்திக்கொண்டு (என்னிடமிருந்து தப்பி) மலைக்குச் சென்றுவிடுவார்களோ என்று நான் நினைத்தேன். உடனே அவர்களுக்கும் அந்த மலைக்குமிடையே ஓர் அம்பை எய்தேன். அந்த அம்பைப் பார்த்ததும் அவர்கள் நின்றுவிட்டனர்.

உடனே அவர்களைப் பிடித்துக் கொண்டுவந்தேன். அவர்களிடையே பனூ ஃபஸாரா குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியும் இருந்தாள். அவளது உடலில் தோலினாலான மேல்துண்டு ஒன்று இருந்தது. அவளுடன் அவளுடைய மகளும் இருந்தாள். அவள் அரபுப் பெண்களிலே அழகானவளாகத் தெரிந்தாள். அவர்களைப் பிடித்துக்கொண்டு அபூபக்ரு (ரலி) அவர்களிடம் வந்தேன். அபூபக்ரு (ரலி),  அம் மகளை எனக்குக் கூடுதல் பங்காக வழங்கினார்கள்.

நாங்கள் (மதீனாவுக்கு) வந்தோம். நான் (அதுவரை) அவளுடைய ஆடையைக் களைந்திருக்கவில்லை. கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னைச் சந்தித்தபோது, “ஸலமா! அப்பெண்ணை எனக்கு வழங்கிவிடு” என்று கூறினார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! அவள் என்னைக் கவர்ந்துவிட்டாள். நான் (இதுவரை) அவளுடைய  ஆடையைக் களையவில்லை” என்று கூறிவிட்டேன்.

பிறகு மறுநாள் கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னைச் சந்தித்த போதும் “ஸலமா! அப்பெண்ணை என்னிடம் வழங்கிவிடு! உன் தந்தை (உன்னைப் பெற்றெடுத்ததற்காக) அல்லாஹ்வுக்கே நன்றி!” என்று கூறினார்கள்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களுக்கே உரியவள் (அவளை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்). அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவளுடைய ஆடையை(இதுவரை)க் களையவில்லை” என்று கூறினேன்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவளை மக்காவாசிகளிடம் அனுப்பிவைத்து, மக்காவில் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் சிலரை விடுவித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)

Share this Hadith: