وَحَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، وَثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُفْرِدَ يَوْمَ أُحُدٍ فِي سَبْعَةٍ مِنَ الأَنْصَارِ وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ فَلَمَّا رَهِقُوهُ قَالَ ” مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ ” . فَتَقَدَّمَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ ثُمَّ رَهِقُوهُ أَيْضًا فَقَالَ ” مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ ” . فَتَقَدَّمَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى قُتِلَ السَّبْعَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِصَاحِبَيْهِ ” مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا ”
உஹுதுப் போர் நாளில் (ஒரு கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அன்ஸாரிகளில் எழுவரும் குறைஷி(முஹாஜிர்)களில் இருவரும் மட்டுமே தம்முடனிருக்க தனித்து விடப்பட்டார்கள். (மற்ற தோழர்கள் சிதறி ஓடிவிட்டனர்.)
இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிரிகள் நெருங்கிய போது, “நம்மிடமிருந்து இவர்களை விரட்டியடிப்பவர் யார்? அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் / அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்” என்று கூறினார்கள்.
அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் முன்னேறிச் சென்று போரிட்டார். இறுதியில் அவர் கொல்லப்பட்டார். பிறகு மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிரிகள் நெருங்கினார்கள். அப்போது “நம்மிடமிருந்து இவர்களை விரட்டியடிப்பவர் யார்? அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் / அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்” என்று கூறினார்கள்.
அப்போது அன்ஸாரிகளில் மற்றொருவர் முன்னேறிச் சென்று எதிரிகளுடன் போரிட்டார். அவரும் கொல்லப்பட்டார். இவ்வாறே (ஒருவர் பின் ஒருவராக) அன்ஸாரிகள் எழுவரும் கொல்லப்பட்டனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (உடனிருந்த) தம்மிரு (குறைஷித்) தோழர்களிடம், “நாம் நம்முடைய (அன்ஸாரித்) தோழர்களிடம் நீதமாக நடந்துகொள்ளவில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)