حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، أَنَّهُ سَمِعَ جُنْدُبًا يَقُولُ :
أَبْطَأَ جِبْرِيلُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ الْمُشْرِكُونَ قَدْ وُدِّعَ مُحَمَّدٌ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ { وَالضُّحَى * وَاللَّيْلِ إِذَا سَجَى * مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى}
ஜிப்ரீல் (அலை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (சில நாட்கள்) தாமதமாக வந்தார்கள். அப்போது இணைவைப்பாளர்கள், “முஹம்மது விடை கொடுக்கப்பட்டு விட்டார்” என்று கூறினர்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “முற்பகலின் மீதாணை! இருண்டுவிட்ட இரவின் மீதாணை! (நபியே!) உம் இறைவன் உம்மைக் கைவிடவில்லை; உம்மை வெறுத்துவிடவுமில்லை” (93:1-3) எனும் வசனங்களை அருளினான்.
அறிவிப்பாளர் : ஜுன்துப் (ரலி)