அத்தியாயம்: 32, பாடம்: 41, ஹதீஸ் எண்: 3357

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، – يَعْنِي ابْنَ عُلَيَّةَ – حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ يَنْظُرُ لَنَا مَا صَنَعَ أَبُو جَهْلٍ ‏”‏ ‏.‏ فَانْطَلَقَ ابْنُ مَسْعُودٍ فَوَجَدَهُ قَدْ ضَرَبَهُ ابْنَا عَفْرَاءَ حَتَّى بَرَكَ – قَالَ – فَأَخَذَ بِلِحْيَتِهِ فَقَالَ آنْتَ أَبُو جَهْلٍ فَقَالَ وَهَلْ فَوْقَ رَجُلٍ قَتَلْتُمُوهُ – أَوْ قَالَ – قَتَلَهُ قَوْمُهُ قَالَ وَقَالَ أَبُو مِجْلَزٍ قَالَ أَبُو جَهْلٍ فَلَوْ غَيْرُ أَكَّارٍ قَتَلَنِي


حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، حَدَّثَنَا أَنَسٌ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ يَعْلَمُ لِي مَا فَعَلَ أَبُو جَهْلٍ ‏”‏ ‏.‏ بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ وَقَوْلِ أَبِي مِجْلَزٍ كَمَا ذَكَرَهُ إِسْمَاعِيلُ ‏

“அபூஜஹ்லு (பத்ருப் போர்க் களத்தில்) என்ன ஆனான் எனப் பார்த்து வருபவர் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) (அவனைப் பார்த்துவரச்) சென்றார்கள். அவனை (அன்ஸாரியான) அஃப்ரா என்பவருடைய இரு மகன்கள் (முஆத், முஅவ்வித் இருவரும் பலமாகத்) தாக்கியதில் அவன் (குற்றுயிராக) வீழ்ந்து கிடப்பதைக் கண்டார்கள்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவனது தாடியைப் பிடித்துக்கொண்டு, “அபூஜஹ்லு நீதானே?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஜஹ்லு, “நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக – தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக – ஒருவன் உண்டா?” என்று பீற்றிக்கொண்டான்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்புகள் :

அபூமிஜ்லஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “குடியான குடும்பத்தில் பிறக்காத ஒருவன் (அன்ஸாரி அல்லாதவன்) என்னைக் கொன்றிருந்தால் நன்றாயிருந்திருக்குமே!” என அபூஜஹ்லு கூறினான் என்று இடம்பெற்றுள்ளது.

ஹாமித் பின் உமர் அல் பக்ராவீ (ரஹ்) வழி அறிவிப்பும் “அபூஜஹ்லு என்ன ஆனான் என எனக்காக அறிந்துவருபவர் யார்?” என்றே தொடங்குகிறது. மேலும், அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களின் குறிப்பும் அதில் இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment