அத்தியாயம்: 33, பாடம்: 13, ஹதீஸ் எண்: 3433

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ عَسْكَرٍ التَّمِيمِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا يَحْيَى – وَهُوَ ابْنُ حَسَّانَ – حَدَّثَنَا مُعَاوِيَةُ،  – يَعْنِي ابْنَ سَلاَّمٍ – حَدَّثَنَا زَيْدُ بْنُ سَلاَّمٍ، عَنْ أَبِي سَلاَّمٍ، قَالَ :‏

قَالَ حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا بِشَرٍّ فَجَاءَ اللَّهُ بِخَيْرٍ فَنَحْنُ فِيهِ فَهَلْ مِنْ وَرَاءِ هَذَا الْخَيْرِ شَرٌّ قَالَ نَعَمْ ‏.‏ قُلْتُ هَلْ وَرَاءَ ذَلِكَ الشَّرِّ خَيْرٌ قَالَ ‏”‏ نَعَمْ ‏”‏ ‏.‏ قُلْتُ فَهَلْ وَرَاءَ ذَلِكَ الْخَيْرِ شَرٌّ قَالَ ‏”‏ نَعَمْ ‏”‏ ‏.‏ قُلْتُ كَيْفَ قَالَ ‏”‏ يَكُونُ بَعْدِي أَئِمَّةٌ لاَ يَهْتَدُونَ بِهُدَاىَ وَلاَ يَسْتَنُّونَ بِسُنَّتِي وَسَيَقُومُ فِيهِمْ رِجَالٌ قُلُوبُهُمْ قُلُوبُ الشَّيَاطِينِ فِي جُثْمَانِ إِنْسٍ ‏”‏ ‏.‏ قَالَ قُلْتُ كَيْفَ أَصْنَعُ يَا رَسُولَ اللَّهِ إِنْ أَدْرَكْتُ ذَلِكَ قَالَ ‏”‏ تَسْمَعُ وَتُطِيعُ لِلأَمِيرِ وَإِنْ ضُرِبَ ظَهْرُكَ وَأُخِذَ مَالُكَ فَاسْمَعْ وَأَطِعْ ‏”‏

நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (அறியாமைக் காலத்) தீமையில் மூழ்கிக்கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். அதில் நாங்கள் இருந்துகொண்டிருக்கின்றோம். இந்த நன்மைக்குப் பின்னால் (அரசியல் குழப்பத்) தீமை ஏதும் உண்டா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

நான், “அந்தத் தீமைக்குப் பின்னால் நன்மை (நல்லாட்சி) ஏதும் உண்டா?” என்று கேட் டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்று விடையளித்தார்கள். நான், “அந்த நன்மைக்கும் பின்னால்  (அரசியல் குழப்பத்) தீமை ஏதும் உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம்” என்று பதிலளித்தார்கள். நான், “அது எப்படிப்பட்ட தீமை?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “எனக்குப் பிறகு சில தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் எனது நேர்வழி அல்லாத வழியில் நடப்பார்கள். எனது வழி முறையை (சுன்னா) கடைப் பிடிக்கமாட்டார்கள். அவர்களிடையே சிலர் தோன்றுவார்கள். அவர்கள் மனித உடலையும் ஷைத்தான்களின் உள்ளத்தையும் கொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள்.

நான், “அந்தக் கால கட்டத்தை அடைந்தால் நான் என்ன செய்ய வேண்டும், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு, “அந்த(க் கால) ஆட்சியாளரின் கட்டளையைச் செவியுற்று அவருக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள். நீ முதுகில் தாக்கப்பட்டாலும் உன் செல்வங்கள் பறிக்கப்பட்டாலும் சரியே! (அந்த ஆட்சித் தலைவரின் கட்டளையைச்) செவியுற்றுக் கட்டுப்பட்டு நடந்துகொள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)

Share this Hadith:

Leave a Comment