وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ قَالَ :
لَمَّا نَزَلَتْ { لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} كَلَّمَهُ ابْنُ أُمِّ مَكْتُومٍ فَنَزَلَتْ { غَيْرُ أُولِي الضَّرَرِ}
“இறைநம்பிக்கையாளர்களில் (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் அல்லாஹ்வின் பாதையில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாகமாட்டர்” எனும் (4:95) வசனம் அருளப்பெற்றபோது, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் (அது குறித்துப்) பேசினார்கள். அப்போது “தக்க காரணமின்றி …“ என்பது அருளப்பெற்றது.
அறிவிப்பாளர் : பராஉ (ரலி)