அத்தியாயம்: 34, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3591

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ الضَّرِيرُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏ ‏

لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ جَاءَ جَاءٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أُكِلَتِ الْحُمُرُ ‏.‏ ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أُفْنِيَتِ الْحُمُرُ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبَا طَلْحَةَ فَنَادَى إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ فَإِنَّهَا رِجْسٌ أَوْ نَجِسٌ ‏.‏ قَالَ فَأُكْفِئَتِ الْقُدُورُ بِمَا فِيهَا ‏

கைபர் போர் நாளன்று ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! கழுதைகள் (அறுத்து) உண்ணப்படுகின்றன” என்று கூறினார். பிறகு மற்றொருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! கழுதைகள் (உண்டு) தீர்க்கப்பட்டுவிட்டன” என்று சொன்னார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கு(மக்களுக்கு அறிவிப்புச் செய்யும் படி)க் கட்டளையிட, அவர் மக்களிடையே, “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீங்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதெனத் தடை செய்கிறார்கள். ஏனெனில், அவை அசுத்தமானவையாகும்” என்று அறிவிப்புச் செய்தார். உடனே பாத்திரங்கள் அவற்றில் இருந்தவற்றோடு கவிழ்க்கப்பட்டன.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

Share this Hadith:

Leave a Comment