حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ :
أَنَّ رَجُلاً أَكَلَ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِشِمَالِهِ فَقَالَ ” كُلْ بِيَمِينِكَ ” . قَالَ لاَ أَسْتَطِيعُ قَالَ ” لاَ اسْتَطَعْتَ ” . مَا مَنَعَهُ إِلاَّ الْكِبْرُ . قَالَ فَمَا رَفَعَهَا إِلَى فِيهِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் இடக் கையால் ஒருவர் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “வலக் கையால் உண்பீராக!” என்று சொன்னார்கள். அகம்பாவம் அவரைத் தடுத்தது. அவர், “என்னால் முடியாது” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உம்மால் முடியாமலே போகட்டும்!” என்று சொன்னார்கள். அவ்வாறே, அவரால் தமது கையை வாய்க்கு உயர்த்த முடியாமல் போனது.
அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)